இரண்டு வார இடைவெளியில் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் இரண்டுபேர் பலி
அமெரிக்காவில்,இந்திய வம்சாவளியினர் இரண்டுபேர் இரண்டு வார இடைவெளியில் கொல்லப்பட்டுள்ளார்கள்.
சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய இளைஞர்
இம்மாதம், அதாவது நவம்பர் மாதம், 9ஆம் திகதி, Ohio நகரில், கார் ஒன்றிற்குள் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் இளைஞர் ஒருவரைக் கண்ட சாரதிகள் சிலர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
விசாரணையில் அவரது பெயர் ஆதித்யா அட்லஹா (Aaditya Adlakha, 26) என்பது தெரியவந்துள்ளது.
அவர் சின்சினாட்டி கல்லூரியில் முனைவர் பட்டம் பெறுவதற்காக படித்துவந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதித்யா, சிகிச்சை பலனின்றி 11ஆம் திகதி உயிரிழந்துவிட்டார்.
விபத்தில் பலியான இந்திய வம்சாவளியினர்
இம்மாதம், 18ஆம் திகதி, சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பியுஷ் பட்டேல் (Piyush Patel, 52) என்பவர் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியுள்ளது.
கார் மோதியதில், பியுஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
காரை ஓட்டிய கேமரான் லூயிசா (Cameron Luiza, 25) என்பவரை பொலிசார் விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
பியுஷ் பட்டேலும் Ohio நகரில்தான் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |