அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்து: விமானிகள் இருவரும் மரணம்
இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இரு விமானிகளும் உயிரிழந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் விமானிகள் இருவர் மரணம்
அருணாச்சல பிரதேசத்தின் மாண்ட்லா மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்திய ராணுவ ஹெலிகாப்டர் வியாழன் காலை சுமார் 9:15 மணியளவில் தகவல் தொடர்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போன விமானிகளை தேடும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இரு விமானிகளும் உயிரிழந்ததை ராணுவ அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.
Photo: Twitter/@easterncomd via PTI
லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஏ என அடையாளம் காணப்பட்ட விமானிகளின் உடல்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இருவரது உடல்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி நடவடிக்கை எடுக்கப்படும். மாலை 4 மணியளவில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இது முதல் விபத்தல்ல
கடந்த ஆண்டு அக்டோபரிலும் ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் தவாங் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆனால் தவாங்கில் இது முதல் விபத்தல்ல. 2017-ஆம் ஆண்டில், விமானப்படையின் Mi-17 V5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 இந்திய விமானப்படை (IAF) குழு உறுப்பினர்கள் மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.