பனிச்சரிவில் சிக்கி இந்திய இராணுவ வீரர்கள் மாயம்! தேடுதம் பணி தீவிரம்
இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரர்கள் மாயமான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கு அருகில் உள்ள வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 7 இந்திய ராணுவ வீரர்கள் இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியதாகவும், அவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதார்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரர்கள் இமயமலையின் உயரமான கமெங் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பனிச்சரிவில் சிக்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக கமெங் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
பனிச்சரிவில் சிக்கி மாயமான வீரர்களை தேடும் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மீட்புப் பணிகளில் உதவ சிறப்புக் குழுக்கள் விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளன என ஹர்ஷ் வர்தன் பாண்டே தெரிவித்துள்ளார்.