இந்திய ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் அதி விரைவு வான் பாதுகாப்பு ஏவுகணை வாங்க திட்டம்
இந்திய ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் அதி விரைவு வான் பாதுகாப்பு ஏவுகணை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
அதி விரைவு வான் பாதுகாப்பு ஏவுகணை
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தரைவழி தாக்குதலை விட வான்வழி தாக்குதலே அதிகமாக இருந்தது.
குறிப்பாக பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதன் காரணமாக இந்திய ராணுவத்தில் தரையிலிருந்து வான் இலக்குகளை தகர்க்கும் படைப்பிரிவுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.30,000 கோடி மதிப்பில் க்யூஆர்-எஸ்ஏஎம் என்ற அதிவிரைவு வான் பாதுகாப்பு ஏவுகணை யூனிட்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதனை பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
இதன் மூலம் எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ட்ரோன்களை 25 கி.மீ முதல் 30. கி.மீ தூரத்தில் சுட்டு வீழ்த்த முடியும்.
இந்த மாத இறுதியில் நடைபெறும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |