சொந்த அக்காவை கர்ப்பிணி என்றும் பாராமல் தலையை வெட்டிக் கொன்ற தம்பி: அதிரவைக்கும் ஒரு செய்தி
குடும்பத்தினர் விருப்பத்துக்கு மாறாக தனது காதலனைத் திருமணம் செய்து கொண்டதற்காக இந்தியாவில் ஒரு இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த கீர்த்தி தோரே (Kirti Thore, 19) என்ற இளம்பெண், தன்னுடன் கல்லூரியில் படிந்த சக மாணவரை காதலித்திருக்கிறார். அவரது காதலுக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
ஆகவே, வீட்டை விட்டு வெளியேறி, இரகசியமாக தன் காதலனைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் கீர்த்தி.
தம்பதியர் இருவரும் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்துவந்த நிலையில், கீர்த்தி கர்ப்பமுற்றிருக்கிறார். அவரைப் பார்க்க விரும்புவதாக கீர்த்தியின் தாய் ஷோபாவும் (39), கீர்த்தியின் தம்பியான சஞ்சயும் (Sanjay Mote, 17) கூறியிருக்கிறார்கள்.
அதன்படி, அவர்கள் இருவரும் கீர்த்தியின் வீட்டுக்கு வர, கீர்த்தி மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று அமரவைத்துவிட்டு, அவர்களுக்கு தேநீர் தயாரிப்பதற்காக சமையலறைக்கு சென்றிருக்கிறார்.
அவர் தேநீர் தயாரித்துக்கொண்டிருக்கும்போதே சமையலறைக்குள் நுழைந்த சஞ்சய், கதிர் (நெல்) அறுக்கும் அரிவாளால் கீர்த்தியின் தலையை வெட்டியிருக்கிறார்.
கீர்த்தியின் தாய் மகளின் காலைப் பிடித்துக்கொள்ள, தம்பி தலையை வெட்ட, அதைவிட கொடூரம் என்னவென்றால், மகளின் தலையுடன், தாயும் மகனும் செல்பி எடுத்து தங்கள் உறவினர்களுக்கு காட்டியிருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் வீட்டில் உடல் நலமில்லாமல் படுத்திருந்த கீர்த்தியின் கணவன் சத்தம் கேட்டு சமையலறைக்குள் வர, அவரையும் தாக்க முயன்றிருக்கிறார் சஞ்சய்.
ஆனால், அவர் தப்பியோடி விட, தன் அக்காவின் தலையைக் கையில் பிடித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்திருக்கிறார் சஞ்சய்.
பின்னர் சஞ்சயும், அவரது தாயும் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று சரணடைந்திருக்கிறார்கள். பொலிசார் அவர்களைக் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் கீர்த்தியின் தலையுடன் எடுத்த புகைப்படத்தை மொபைலிலிருந்து அழித்துவிட்டார்களாம்.
ஆகவே, பொலிசார் அந்த மொபைலை தடயவியல் துறைக்கு அனுப்பி, அந்த புகைப்படத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.