பெற்றோரைப் பிரிந்து ஜேர்மனியில் தவிக்கும் இந்தியக் குழந்தை: இந்தியர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்
ஜேர்மனியில் வாழ்ந்த ஒரு இந்திய தம்பதியரின் குழந்தை, அதிகாரிகளால் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், பிள்ளையை இந்தியாவுக்கு அனுப்பக் கோரி ஜேர்மன் வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜேர்மன் வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது செப்டம்பர் 3ஆம் திகதி, ஜேர்மனியின் Mannheim நகரத்திலுள்ள Paradeplatz என்னுமிடத்தில் ஜேர்மன் வாழ் இந்தியர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
#WATCH | The Indian community in Germany assembled at Mannheim Paradeplatz City to demand the repatriation of baby Ariha to India. pic.twitter.com/0dHkIXnf1F
— ANI (@ANI) September 3, 2023
மோடி அவர்களே, குழந்தை அரிஹாவை இந்தியாவுக்கு அனுப்பும்படி ஜேர்மனிக்கு சொல்லுங்கள் என்றும், ஜேர்மனி, அரிஹாவை இந்தியாவுக்கு அனுப்பு என்றும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகளும் பங்கேற்றனர்.
என்ன பிரச்சினை?
ஏழு மாதக் குழந்தையான அரிஹா தனது பெற்றோருடன் ஜேர்மனியில் வாழ்ந்துவரும்போது அவள் தாக்கப்பட்டதாகக் கூறி, ஜேர்மன் இளைஞர் நல அலுவலகம் பிள்ளையைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது.
அரிஹாவின் பெற்றோரான தாராவும் பவேஷ் ஷாவும் இந்தியா திரும்பிவிட்ட நிலையிலும், இப்போது இரண்டு வயதைக் கடந்துவிட்ட அரிஹா ஜேர்மனியிலேயே இருக்கிறாள்.
இந்தியக் குழந்தையை இந்தியாவுக்கு அனுப்ப வலியுறுத்தல்
அரிஹா தாக்கப்பட்டது தொடர்பாக தாரா, பவேஷ் தம்பதியர் மீது பதிவுசெய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் விலக்கிகொள்ளப்பட்ட பின்பும், ஜேர்மன் அதிகாரிகள் குழந்தையை இந்தியாவுக்கு அனுப்பவில்லை.
குழந்தையை அதன் பெற்றோர்தான் தாக்கினார்களா என்பது உறுதி செய்யப்படாவிட்டாலும், குழந்தை மோசமாக தாக்கப்படிருந்தது உண்மை என்று கூறும் ஜேர்மன் அதிகாரிகள், அரிஹாவின் பெற்றோர் குழந்தையின் பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளார்கள் என்கிறார்கள்.
இந்திய அரசு அரிஹாவை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |