அமெரிக்காவில் 6 வயது மகனுடன் துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய தம்பதி மரணம்!
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி தங்கள் 6 வயது மகனுடன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளனர்.
இந்திய குடும்பம்
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் வசித்து வந்த இந்திய தம்பதி யோகேஷ் ஹொன்னால நகராஜப்பா (37), பிரதீபா அமர்நாத் (35). இவர்கள் தங்கள் 6 வயது மகன் யாஷ் ஹொன்னாலவுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 18ஆம் திகதி மூவரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணியைத் தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த குடும்பத்தினர் இந்திய மாநிலம் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் இது இரட்டை கொலை மற்றும் தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தாய் கூறிய விடயம்
இந்த நிலையில் யோகேஷின் தாய் ஷோபா கூறுகையில், 'மூவரும் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையிடம் இருந்து எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மேலும் அவர்கள் மரணத்திற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
யோகேஷ் என்னை அடிக்கடி தொலைபேசியில் அழைத்தார். நான் இன்னொரு மகன் புனித்துடன் இங்கு வசிக்கிறேன். தம்பதியிடையே குடும்பப் பிரச்சனை எதுவும் இல்லை.
அவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் அவர்கள் இறந்ததற்கான காரணத்தை நாங்கள் அறிய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |