வெளிநாட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்: மர்மம் விலகியது
அமெரிக்காவில், இந்திய வம்சாவளியினரான தம்பதியர் மற்றும் அவர்களுடைய மகள் ஆகிய மூன்றுபேர் தங்கள் வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில், அதன் பின்னணியிலுள்ள மர்மம் விலகியுள்ளது.
உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்
அமெரிக்காவின் Massachusetts மாகாணத்தின் Dover நகரில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளியினரான ராகேஷ் கமல் (57) அவரது மனைவி டீனா (54) மற்றும் தம்பதியரின் மகளான அரியானா (18) ஆகியோர், கடந்த வியாழக்கிழமை இரவு, தங்கள் வீட்டில் உயிரற்ற நிலையில் கிடப்பதை அவர்களுடைய உறவினர் ஒருவர் கண்டு பொலிசாருக்கு தகவலளித்தார்.
X/@nikethehat, RickKamal
அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 5 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள மாளிகையில் வசதியாக வாழ்ந்த குடும்பம் திடீரென உயிரிழந்தது எதனால் என்னும் கேள்வி எழுந்தது.
மர்மம் விலகியது
இந்நிலையில், முதற்கட்ட உடற்கூறு ஆய்வுக்குப் பின் அந்த குடும்பத்தினரின் மரணம் குறித்த மர்மம் விலகியுள்ளது.
Norfolk மாவட்ட அட்டர்னி ஜெனரல், ராகேஷ் தன் மனைவி டீனாவையும் மகள் அரியானாவையும் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
Image Source : EduNova Co and blogwithmom.com
என்றாலும், ராகேஷ் எதற்காக இப்படி ஒரு பயங்கர முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. அத்துடன், இறுதி உடற்கூறு ஆய்வு முடியவும் பல வாரங்கள் ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |