பாகிஸ்தான், துருக்கி மாணவர்களை பாதுகாத்த இந்திய தேசிய கொடி: உக்ரைனில் இந்திய மாணவர் நெகிழ்ச்சி!
இந்திய மாணவர்களுடன் சேர்த்து, பாகிஸ்தான் மற்றும் துருக்கி மாணவர்களும் உக்ரைனின் எல்லையை கடக்க இந்திய தேசிய கொடி உதவியதாக இந்திய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனில் ரஷ்ய போர் ஏழாவது நாளாக இன்றும் தொடரும் நிலையில், உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களை உக்ரைனில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தங்கள் வாகனங்களில் இந்திய தேசிய கொடியை பறக்கவிட்டவாறு உக்ரைன் எல்லையில் இருந்து ருமேனியாவின் புக்கரெஸ்ட் நகருக்கு பத்திரமாக வந்தடைந்துள்ளனர்.
#WATCH | "We were easily given clearance due to the Indian flag; made the flag using a curtain & colour spray...Both Indian flag & Indians were of great help to the Pakistani, Turkish students," said Indians students after their arrival in Bucharest, Romania#UkraineCrisis pic.twitter.com/vag59CcPVf
— ANI (@ANI) March 2, 2022
இந்த நிலையில் இந்திய மாணவர்கள் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்திய தேசிய கொடி இந்திய மாணவர்களுடன் சேர்த்து பாகிஸ்தான் மற்றும் துருக்கிய மாணவர்களும் உக்ரைனின் எல்லையை பத்திரமாக கடக்க உதவியதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய உக்ரைனின் ஒடேசா பகுதியைச் சேர்ந்த இந்திய மருத்துவ மாணவர், நாங்கள் உக்ரைன் சிக்கி தவித்து கொண்டிருக்கும் போது, நீங்கள் இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி வெளியேறுங்கள், அப்போது உங்களுக்கு எந்தவொரு பிரச்சனைகளும் ஏற்படாது என சிலர் அறிவுறுத்தினர்.
அதன் அடிப்படையில், நாங்களும் எங்கள் வாகனத்தில் இந்திய தேசிய கொடி மற்றும் colour spray ஆகியவற்றால் வரைபட்ட தேசிய கொடி ஆகியவற்றை பயன்படுத்தி பத்திரமாக உக்ரைனை விட்டு வெளியேறி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் எங்களுடன், பாகிஸ்தான் மற்றும் துருக்கி மாணவர்களையும் பத்திரமாக உக்ரைன் எல்லையை கடக்க இந்திய தேசிய கொடி உதவியதாக தெரிவித்துள்ளார்.
இந்த செயல்முறையை உக்ரைனில் சிக்கிக்கொண்டுள்ள இந்திய மாணவர்களுக்கு மத்தியமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.