பேக்கரி ஓவனுக்குள் உடல் கருகி உயிரிழந்த இந்திய இளம்பெண்: நீடிக்கும் மர்மம்
கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவர் பேக்கரி ஓவனுக்குள் சிக்கி உடல் கருகி உயிரிழந்த விடயத்தில், அவர் எப்படி அந்த ஓவனுக்குள் சிக்கி உயிரிழந்தார் என்பது இன்னமும் மர்மமாகவே நீடிக்கிறது.
ஓவனுக்குள் உடல் கருகி உயிரிழந்த இந்திய இளம்பெண்
கனடாவுக்கு புலம்பெயர்ந்த குர்சிம்ரன் கௌர் (Gursimran Kaur, 19) என்னும் இளம்பெண்ணும் அவரது தாயும், Halifaxஇல் அமைந்துள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் பணி செய்துவந்துள்ளார்கள்.

2024ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, தன் மகளைக் காணாமல் தேடிய அவரது தாய், குர்சிம்ரனுக்கு போன் செய்ய, அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்திருக்கிறது.
அப்படி தன் மகள் மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்யமாட்டார் என்பதை அறிந்த அவரது தாய் மகளைத் தேடி அலைய, ஆள் நடக்கும் அளவிலான பெரிய ஓவன் ஒன்றிற்குள் குர்சிம்ரன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
நீடிக்கும் மர்மம் விடயம் என்னவென்றால், குர்சிம்ரன் எப்படி உயிரிழந்தார் என்பது இன்னமும் தெரியவரவில்லை. ஏனென்றால், அந்த ஓவனை வெளியிலிருந்து பூட்டமுடியாது.

அப்படியானால், குர்சிம்ரன் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டாரா என்றால், தன் மகள் மிகவும் சந்தோஷமாக இருந்ததாகவும், அப்படி ஒரு விடயம் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறுகிறார் குர்சிம்ரனின் தாயான மன்தீப் கௌர். ஆக, குர்சிம்ரனின் மரணம் மர்மமாகவே நீடிக்கிறது.
இதற்கிடையில், குர்சிம்ரன் வேலை செய்த அந்த பேக்கரியில் இருந்த ஓவன்களை எல்லாம் இப்போது மாற்றிவிட்டார்கள்.
ஆள் நுழைய முடியாத, மற்றும் வெளியிலிருந்து ஓவனுக்குள் இருப்பதை கண்ணாடி மூலம் பார்க்கும் வசதி கொண்ட ஓவன்கள் அங்கு தற்போது அமைக்கப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |