ஒரே இரவில் கோடீஸ்வரர்.. கடைசி நேரத்தில் வாங்கிய லொட்டரி மூலம் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
இந்தியாவில் பெண் ஒருவருக்கு லொட்டரி சீட்டு மூலம் சுமார் 44 கோடி பரிசு தொகையாக கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை பூர்விகமாக கொண்ட லீனா ஜலால், அபுதாபியில் மனித வள வல்லுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் அங்குள்ள பிக் டிக்கெட் நிறுவனத்தில் ஒரு லொட்டரி சீட்டை வாங்கியிருந்தார்.
பிப்ரவரி 3 ஆம் திகதி நடந்த குலுக்கல் முறையில் இவர் வாங்கிய அந்த டிக்கெட்டிற்கு பெருமளவில் பரிசு தொகை கிடைத்தது. லீனா ஜலால் பத்து பேருடன் பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்வதாக கூறியதையடுத்து லீனா ஜலாலுக்கு சுமார் 22 மில்லியன் திர்ஹாம் பரிசு தொகை கிடைத்துள்ளது.
அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.44 கோடியே 75 லட்சம் ரூபாய் அவருக்கு கிடைத்துள்ளது. பரிசு தொகையின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த சுரைஃப் சுரு என்பவருக்கும் லாட்டரி மூலம் அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. அவர் வாங்கிய டிக்கெட்டிற்கு 2 கோடி பரிசு கிடைத்துள்ளது.
இவர் தனது பரிசுத் தொகையை 29 பேருடன் பகிர்ந்து கொள்வதாகவும் அதில் ஒரு பகுதியை தனது ஏழை நண்பர்களுக்கு உதவ உள்ளதாகவும் கூறினார்.