ஆட்கடத்தல் வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளி நபர்: வெளிவரும் பகீர் பின்னணி
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள இந்திய உணவக மேலாளர் ஒருவருக்கு ஆட்கடத்தல் மற்றும் அடிமைத்தனம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக 57 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தி
அத்துடன், ஏழு பேருக்கு 40,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற தரவுகளில், இந்திய வம்சாவளி 71 வயதான Shreesh Tiwari என்பவர் கடந்த 2020ல் ஜார்ஜியாவின் Cartersville பகுதியில் அமைந்துள்ள Budgetel சாலையோர உணவகத்தில் மேலாளராக இணைந்துள்ளார்.
Credit: googlemaps
இந்த நிலையில், பெண் ஒருவரை அந்த மோட்டலில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தி, அவருக்கு தங்க ஒரு அறையும் கொடுத்துள்ளார்.
குறித்த பெண் முன்பு வீடற்ற நிலையை அனுபவித்தவர் என்றும் ஹெராயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் அவரது இளம் குழந்தையை தம்முடன் வளர்க்கும் உரிமையை இழந்தார் என்பதும் திவாரி அறிந்து வைத்திருந்தார்.
மேலும், குழந்தை மீதான உரிமையை மீட்டு தருவதாகவும், உரிய சம்பளம் மற்றும் குடியிருக்க வசதியும் செய்து தருவதாக திவாரி வாக்குறுதியும் அளித்திருந்துள்ளார்.
இனி தொடர்பு கொள்ள வேண்டாம்
ஆனால், நாளடைவில், குறித்த பெண்ணை திவாரி கண்காணிக்கத் தொடங்கியதுடன், கட்டுப்பாடுகளும் விதித்துள்ளார். அத்துடன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இனி தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் கட்டாயப்படுத்தியுள்ளார்.
Credit: Pexels
மட்டுமின்றி, மோட்டலில் அவருக்கு வழங்கிய அறையிலிருந்து வெளியேற்றிவிடுவதாக அடிக்கடி மிரட்டி திவாரி குறித்த பெண்ணை தமது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். மட்டுமின்றி, போதை மருந்து பழக்கம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாகவும் கூறி மிரட்டி வந்துள்ளார்.
மட்டுமின்றி, தமது ஆசைக்கு இணங்க மறுத்தால் இரவு நேரங்களில் அந்தப் பெண்ணை அறையில் இருந்து வெளியேற்றவும் செய்துள்ளார். இறுதியில் திவாரி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்ற விசாரணையின் முடிவில் அவருக்கு 57 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |