உயிருடன் பிடித்துச் சென்று அதை பார்த்த பின்னரே.. இந்தியரை கொலை செய்தனர்! அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
தாலிபான்கள் நடத்திய தாக்குதலில், இந்திய பத்திரிக்கையாளர் காயமடைந்த நிலையில், அவர் மசூதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால், அங்கு தாலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்துவதற்காக, தாக்குதல் நடத்தி பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் தாலிபான்களுக்கிடையே பயங்கர சண்டை நடந்து வருவதால், இரு தரப்பினரும், ராக்கெட் வீச்சு, குண்டு வீச்சு என அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பான செய்தியை சேகரிக்க, இந்தியாவைச் சேர்ந்த பத்திகையாளர் டேனிஷ் சித்திக் சென்றிருந்தார். அப்போது காரில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் டேனிஷ் சித்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரின் மரணம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் இவர் புலிட்சர் விருது பெற்ற சிறந்த பத்திரிக்கையாளர் என்பதால், இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பல்வேறு நாடுகள் இதற்கு கண்டனங்களை தெரிவித்தன.
ஆனால் டேனிஷ் சித்திக் எப்படி இறந்தார் என்பது எங்களுக்கு தெரியாது? அதற்கு நாங்கள் காரணமல்ல. அவரது மரணத்துக்காக வருந்துகிறோம் என்று தலிபான்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் டேனிஷ் சித்திக்கை தலிபான்களே கொலை செய்ததாக, அமெரிக்காவின் பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில், டேஷிஷ் சித்திக்கின் அடையாளத்தை சரி பார்த்த பிறகு அவரை தலிபான்கள் கொலை செய்துள்ளனர்.
டேனிஷ் சித்திக், ஆப்கானிஸ்தான் இராணுவ குழுவுடன் கந்தகார் ஸ்பின் போல்டாக் பகுதிக்கு சென்றார். அப்போது தலிபான்கள் தாக்குதல் நடத்தியதால் டேனிஷ் சித்திக்கிடம் இருந்து இராணுவ கமாண்டர் மற்றும் சிலர் பிரிந்து சென்றனர்.
அவருடன் மூன்று இராணுவ வீரர்களே உடன் இருந்தனர். தாக்குதலில் காயம் அடைந்த டேனிஷ் சித்திக்கை ஒரு மசூதிக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து தலிபான்கள் அங்கும் தாக்குதல் நடத்தினார்கள். டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் உயிருடன் பிடித்தனர். பின்னர் அவர் பத்திரிகையாளர் என்ற அடையாளத்தை சரி பார்த்த பிறகு அவரை கொன்றனர்.
டேனிஷ் சித்திக்கை காப்பாற்ற முயன்ற இராணுவ கமாண்டர், மற்ற வீரர்களையும் கொன்றனர். தலிபான்கள் போர் விதிகளை மதிக்கவில்லை. உலகளாவிய சமூகத்தின் நடத்தையை மதிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.