ஈரானில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டியல் பணத்தை வழங்கிய காஷ்மீர் சிறுமிகள்
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போரில் ஈரானில் பல்வேறு கட்டிடங்கள் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான நிலையில், சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் தங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளனர்.
ஈராகு உண்டியல் பணத்தை வழங்கும் சிறுமி
போரினால் பாதிக்கப்பட்ட ஈரான் மக்களுக்கு உதவும் நோக்கில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிதி திரட்டப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் சந்தர்கோட் மற்றும் லடாக் பகுதியில் ஏராளமானோர் நிவாரண நிதி வழங்கினர்.

இதில் முதியவர் ஒருவர் தான் வளர்த்து வந்த ஆட்டை வழங்கினார். பெண்கள் சிலர் தங்களது தங்கம் வெள்ளி உள்ளிட்ட நகைகளை வழங்கினார்.இந்த நிவாரண நிதி சேமிப்பில் சில சிறுவர்களுக்கான மிதிவண்டிகளும் வழங்கப்பட்டது.
அதில் சிறுமி ஒருவர் தனது உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் முழுவதையும் வழங்கினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் இந்த வயதிலே சிறுமியின் மனிதநேயத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
#WATCH | Leh, Ladakh | Amidst regular donation drives in Leh to aid the residents of Iran affected by the US-Israel attacks on the country, involving contributions of money, precious metal jewellery, and valuable items, a little girl breaks her 'gullak' (piggy bank) to contribute… pic.twitter.com/MvRDlXVaq8
— ANI (@ANI) March 30, 2026
மேலும், ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் சேமிப்பு பணத்தை வழங்குமாறு அறிவுறுத்தி இளம் வயதிலே கருணை மற்றும் மனிதநேயத்தை வளர்த்தனர்.
இதே போல் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது தங்க காதணியை வழங்கினார்.
Mobility-impaired Kashmiri girl donates her gold earrings in support of Iran and the resistance.
— Press TV 🔻 (@PressTV) March 23, 2026
Follow: https://t.co/mLGcUTS2ei pic.twitter.com/1htcbPE4bI
நன்றி தெரிவித்த ஈரான்
இந்தியர்கள் வழங்கும் உதவிக்கு இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் கருணை, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு எங்கள் இதயங்களைத் தொட்டது. நீங்கள் ஒரு குழந்தையாக இருக்கலாம், ஆனால் உங்கள் இதயம் வானத்தைப் போல பரந்தது.
Your kindness touched our hearts in a way that words can hardly describe.
— Iran in India (@Iran_in_India) March 24, 2026
You may be just a child, but your heart is as vast as the sky. By breaking your piggy bank to help others, you showed a great act of kindness.
The people of Iran will never forget this beautiful act. Thank… https://t.co/bxgROLsqLm
மற்றவர்களுக்கு உதவ உங்கள் உண்டியலை உடைத்ததன் மூலம், நீங்கள் ஒரு மாபெரும் கருணைச் செயலை வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஈரான் மக்கள் இந்த அழகான செயலை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். சிறிய கைகளாலும் பெரிய காரியங்களைச் செய்ய முடியும் என்பதை உலகிற்கு நினைவூட்டியதற்கு நன்றி" என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |