ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டம்! பசியோடு தூக்கம்.. இப்போது வெளிநாட்டில் விஞ்ஞானியான இந்தியர்
ஒரு வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு பல நாட்கள் பட்டினி கிடந்துள்ள இந்தியர் தற்போது அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்துள்ளார்.
ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டம்
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிர்சாதி என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் ஹலாமி. பழங்குடியின சமூகத்தில் பிறந்த இவரது குடும்பத்தில் வறுமை குடி கொண்டிருந்தது. தனது இளமை பருவம் பற்றி பேசிய பாஸ்கர், எங்களுக்கு என்று சிறிய அளவில் பண்ணை நிலம் இருந்தது. ஆனால், மழை காலங்களில் அதில் பயிரிட முடியாது. வேலையும் இருக்காது. உண்மையில் வாழ்க்கையை நடத்துவது அதிக கஷ்டம் வாய்ந்த ஒன்றாக இருந்தது.
ஒரு வேளை சாப்பாட்டுக்கே நாங்கள் போராட வேண்டியிருந்தது என கூறுகிறார். பல நாட்கள் பசியுடன் தான் தூக்கம். இதனால், மகுவா எனப்படும் பூக்களை பறித்து வந்து சமைப்போம். அதனை எளிதில் சாப்பிடவோ, ஜீரணிக்கவோ முடியாது. பர்சோடு எனப்படும் காட்டு அரிசியை சேகரித்து வருவோம்.
timesofindia
அமெரிக்காவில் மூத்த விஞ்ஞானி
அரிசி மாவை நீரில் கலந்து, வயிற்றை நிரப்ப குடித்து கொள்வோம். பாஸ்கர் ஆசிரம பள்ளியில் 1 முதல் 4-ம் வகுப்பு வரையும், உதவி தொகை தேர்வில் வெற்றி பெற்று, வித்யாநிகேதன் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வரையும் படித்துள்ளார். கட்சிரோலியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி, நாக்பூர் அறிவியல் மையத்தில் எம்.எஸ்சி. ரசாயனம் படித்து முடித்துள்ளார்.
இதன் பின்பு, லட்சுமிநாராயணன் தொழில் நுட்ப மையத்தில் உதவி பேராசிரியராக 2003-ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்டார். மராட்டிய தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற பின், ஆராய்ச்சி படிப்பில் அவரது கவனம் சென்றது. அதன்பின் அமெரிக்காவுக்கு சென்று பிஎச்.டி படித்து, டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ. ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
இந்த துறையில் சிறந்த விஞ்ஞானியாகி உள்ளார். கடின உழைப்பில், கிடைத்த குறைந்த ஊதியத்தில், தன்னை கல்வி பயில வைத்த தனது பெற்றோருக்கு இந்த வெற்றியை பாஸ்கர் சமர்ப்பிக்கிறார். அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் மூத்த விஞ்ஞானியாக அவர் பணியாற்றி வருகிறார்.
researchgate