ஒரே வாரத்தில் இரண்டாவது சம்பவம்... வெளிநாட்டில் மாஸ்க் அணிந்த நபர்களால் இந்திய குடும்பத்திற்கு ஏற்பட்ட துயரம்
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மூன்று மாஸ்க் அணிந்த நபர்களால் இந்திய வம்சாவளி நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே வாரத்தில் இந்தியர்கள் இருவர்
இச்சம்பத்தின்போது குறித்த 52 வயது நபரின் மனைவியும் மகளும் காயங்களுடன் தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரே வாரத்தில் இந்தியர்கள் இருவர் அமெரிக்காவில் வன்முறைக்கு இலக்காகியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
ஜனவரி 20ம் திகதி Hartley Bridge சாலை அருகாமையில் குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பினால் படேலும் அவரது குடும்பத்தினரும் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியிலேயே முகமூடி அணிந்த மூவர் தாக்கியுள்ளனர்.
படேல் அந்த நபர்களை எதித்து போராடிய நிலையில், அந்த மூவரில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர், துப்பாக்கி காயங்களுடன் காணப்பட்ட மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பினால் படேல் மரணம்
இந்த நிலையில், பினால் படேல் காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், அவரது மனைவியும் மகளும் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை சிகாகோவில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தின் போது 23 வயதான இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.