கனடா எல்லையில் இந்தியர்கள் பலியான சம்பவம்... தப்பியவர்களின் நிலை என்ன தெரியுமா?

Canada India
By Balamanuvelan Feb 21, 2022 01:00 PM GMT
Report

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நடந்தே நுழைய முயன்ற இந்தியர்களில் ஒரு குடும்பமே குளிரில் உறைந்து பலியான சம்பவம் நினைவிருக்கலாம்.

குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33) பிள்ளைகள் விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவர்களுடன் கூட அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற மற்றவர்களின் நிலை குறித்து, தொண்டு நிறுவனம் ஒன்றின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான லக்‌ஷ்மி ஸ்ரீதரன் உட்பட சிலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

கடந்த மாதம் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின் போது, நான்கு இந்தியர்கள் பலியாக, இருவர் பனியால் frostbite என்ற பிரச்சினைக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒரு பெண், தன் கையின் ஒரு பகுதியை இழக்க நேரிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கனடா எல்லையில் இந்தியர்கள் பலியான சம்பவம்... தப்பியவர்களின் நிலை என்ன தெரியுமா? | Indian Migrants Who Survived Trek Across Canada

இதில், கனடா அமெரிக்க எல்லையைக் கடந்து ஒரு ஏழு பேர் அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் அமெரிக்க எல்லை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த செய்தி அந்த ஏழு பேரைக் குறித்தது எனலாம்...

அதாவது, அவர்கள் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கவும் பட்டுவிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு பிரச்சினை இனிதான் ஆரம்பம் என்கிறார் La Resistencia என்னும் தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவி நடத்திவரும் Maru Mora Villalpando.

இப்படி நடந்தே அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள், இனி தங்கள் செலவுகளை தாங்களே கவனித்துக்கொள்ளவேண்டும்.

நீங்கள் வைத்திருக்கும் பணத்தை வைத்துத்தான் உங்கள் செலவுகளை நீங்கள் கவனித்துக்கொள்ளவேண்டும், அதுவும், நீங்கள் அமெரிக்காவுக்குள் நுழையும்போது யாராவது உங்கள் பணத்தைக் கொள்ளையிடாமல் இருந்திருந்தால்... பெரும்பாலும் அதற்கு வாய்ப்பில்லை என்கிறார் புலம்பெயர்தல் சட்டத்தரணியான Victoria Carmona.

கனடா எல்லையில் இந்தியர்கள் பலியான சம்பவம்... தப்பியவர்களின் நிலை என்ன தெரியுமா? | Indian Migrants Who Survived Trek Across Canada

சட்டவிரோதமாக புலம்பெயர்வோருக்கு அரசு உதவிகள் கிடைப்பது கடினம் என்பதால், மருத்துவ சிகிச்சை பெறுவதில் கூட சிக்கல் ஏற்படும் என்கிறார் அவர்.

புலம்பெயர்வோருக்கு உதவுவதற்கான அமைப்புகள் கூட, தங்களிடம் போதுமான நிதி இல்லாததால், இப்படி புலம்பெயர்ந்து வருவோர் தங்கள் உறவினர்கள் யாராவது அமெரிக்காவில் இருந்தால், அவர்களைச் சார்ந்துதான் இருக்கவேண்டிவரும் என்கிறார், South Asian Americans Leading Together என்னும் அமைப்பின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான லக்‌ஷ்மி ஸ்ரீதரன்.

இப்படி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுவோருக்கு பொதுவாக யாரும் உதவிக்கு வரவும்மாட்டார்கள் என்கிறார் அவர்.

ஆக, அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட அந்த ஏழு இந்தியர்களும், இப்போது சிறையில் இல்லை என்றாலும், அவர்களது பிரச்சினை தீரவில்லை என்கிறார் Mora Villalpando.

கனடா எல்லையில் இந்தியர்கள் பலியான சம்பவம்... தப்பியவர்களின் நிலை என்ன தெரியுமா? | Indian Migrants Who Survived Trek Across Canada

என்னைப் பொருத்தவரை, அவர்கள் கணுக்காலில் மின்னணு ட்ராக்கிங் அமைப்பு ஒன்று பொருத்தப்பட்டோ அல்லது மொபைல் ஆப் ஒன்றின் மூலமாகவோ கண்காணிக்கப்படுவார்கள் என்கிறார் அவர். அதனால், அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதும் கடினம்.

பொதுவாகவே, இந்தியாவிலிருந்து வருவோர் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட நீண்டகாலம் காத்திருக்கவேண்டும் என்று கூறும் லக்‌ஷ்மி ஸ்ரீதரன், அவர்கள் சொந்த நாட்டில் அரசியல் ரீதியாகவோ, அல்லது எவ்வகையிலானாலும் துன்புறுத்தப்பட்டாலும் கூட, அமெரிக்காவைப் பொருத்தவரை அவர்கள் புகலிடம் பெற போராட வேண்டியிருக்கும் என்கிறார்.

எந்த நேரத்திலும் அவர்கள் நாடு கடத்தப்படுவது முதல் பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அவர்கள் புகலிடம் கோரினாலும் உடனே பதில் கிடைக்குமா என்றும் கூறமுடியாது. எனது அனுபவத்தில் 12 ஆண்டுகள் வரை புகலிடம் மறுக்கப்பட்டவர்களைக் கூட சந்தித்திருக்கிறேன் என்கிறார் Victoria Carmona.

ஆக, உயிர் பிழைத்து கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்து, கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுவிட்டாலும், அவர்களுக்கு பிரச்சினைகள் இன்னமும் தீரவில்லை என்கிறார்கள் இவர்கள்!  


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US