மன்னர் சார்லசின் விருதை நிராகரித்த இந்திய கோடீஸ்வரர்: சுவாரஸ்ய பின்னணி
இந்திய கோடீஸ்வரரான ரத்தன் டாடா, உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் மட்டுமல்ல, அவர் ஒரு பெரும் கொடையாளரும்கூட. ஆகவே, உலகமே அவரை மதிக்கிறது, புகழ்கிறது.
இளவரசர் சார்லசிடமிருந்து வந்த அழைப்பு
அப்படி அவரை கௌரவிக்க ஒருமுறை முடிவுசெய்துள்ளார் பிரித்தானிய மன்னரான சார்லஸ். அது, சார்லஸ் இளவரசராக இருந்த காலகட்டம்.
2018ஆம் ஆண்டு, இளவரசர் சார்லஸ், பக்கிங்காம் மாளிகையில் ரத்தன் டாடாவுக்கு விருது வழங்குவதற்கான ஆயத்தங்கள் தடபுடலாக நடந்துகொண்டிருந்திருக்கின்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக இந்தியாவிலிருந்து மற்றொரு தொழிலதிபரான Suhel Seth என்பவர் இங்கிலாந்துக்குச் சென்றுள்ளார்.
லண்டன் சென்றடைந்த Suhel Seth, தனக்கு டாடாவிடமிருந்து 11 மிஸ்டு கால்கள் வந்துள்ளதை கவனித்துள்ளார். உடனடியாக டாடாவை அவர் மொபைலில் அழைக்க, அவரிடம் தன்னால் சார்லஸ் ஏற்பாடு செய்துள்ள விருது வழங்கும் விழாவுக்கு வரமுடியாது என்று கூறியுள்ளார் டாடா.
அவர் கூறிய காரணம்
உடனே Suhel Seth டாடாவிடம், இது இளவரசர் சார்லஸ் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி, எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இப்போது நான் இளவரசர் சார்லசிடம் என்ன சொல்வது என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு டாடா கூறிய பதில், டிட்டோவுக்கு உடன் நலமில்லை, அதை விட்டு விட்டு என்னால் இங்கிலாந்துக்கு வரமுடியாது என்பதுதான்.
DNA India
யார் அந்த டிட்டோ?
டிட்டோ என்பது யார் தெரியுமா? டிட்டோ என்பது டாடா வளர்க்கும் நாய்களில் ஒன்று. தன் நாய்கள் மீது அதீத பிரியம் கொண்டவர் டாடா. ஆக, தனது நாய்களில் ஒன்றுக்கு உடல் நலமில்லை என்பதால், தன்னால் அதை விட்டு விட்டு விருது வாங்க பிரித்தானியாவுக்கு வரமுடியாது என்று டாடா கூற, Suhel Seth அதை இளவரசர் சார்லசிடம் கூறியிருக்கிறார்.
இளவரசர் சார்லசின் ரியாக்ஷன்
Suhel Seth சொன்னதைக் கேட்ட சார்லசின் ரியாக்ஷனும் எதிர்பார்க்கமுடியாததுதான். ’அதுதான் டாடா, அதனால்தான் அவரது வீடு அவ்வளவு உறுதியாக இருக்கிறது, அதனால்தான் அவரது நிறுவனமும் உறுதியாக நீடித்துக்கொண்டிருக்கிறது’ என்று வியப்புடன் கூறினாராம் சார்லஸ்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |