ஜேர்மனியில் கொலை செய்யப்பட்ட இந்தியர்: மனைவி விடுத்துள்ள கோரிக்கை
ஜேர்மனியில் வாழும் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர உதவுமாறு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
சக இந்தியரால் கொலை
இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள செங்கல்பட்டு என்னுமிடத்தைச் சேர்ந்த பிரகாஷ் பன்னீர் செல்வம் (33) என்பவர், கடந்த வாரம் ஜேர்மனியில் கொலை செய்யப்பட்டார்.
பிரகாஷின் மனைவியாகிய திவ்யா (23), தன் கணவர் பிரகாஷுடன் வேலை செய்யும் இந்தியரான சக ஊழியரால் கொலை செய்யப்பட்டதாக அவருடன் வேலை செய்யும் சில தமிழர்கள் தனக்கு தெரியப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
பல்வேறு அலைக்கழிப்புகளுக்குப் பின் ஒரு நிறுவனத்தில் வேலை செய்த தன் கணவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ள திவ்யா, கணவருடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவுமாறும், அவரது ஊதியத்தைப் பெற்றுத்தர உதவுமாறும் வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |