அமெரிக்காவில் மோசடி செய்த இந்தியருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!
அமெரிக்காவில் போலியான 'கால் சென்டர்' நடத்தி, 4,000-க்கு மேற்பட்ட அமெரிக்கர்களிடம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மோசடி செய்த இந்தியருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநிலம் அஹமதாபாதில், 'கால் சென்டர்' நடத்தியவர் ஷெஷத்கான் பதான் (Shehzadkhan Pathan) வயது 40.
இவரும், உடன் இருந்தவர்களும் அமெரிக்காவைச் சேர்ந்த பலரையும் தானியங்கி அழைப்புகள் வாயிலாக தொடர்பு கொண்டடு, தங்கள் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் பேசி, பல்வேறு போலி கடன் திட்டங்களையும் அறிவித்தனர்.
இத்திட்டங்களில் முதல் தவணை செலுத்தினால் கடன் வழங்கப்படும் என கூறினர். இதற்காக நேரடியாகவும், மின்னணு பரிமாற்ற முறையிலும் அமெரிக்கர்கள் பணம் அனுப்பினர்.
இதன்படி 4,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இந்நிறுவனத்தில் செலுத்தினர்.
தங்கள் பணத்தை திரும்ப தரும்படி கேட்டவர்களை அமெரிக்க புலனாய்வு பிரிவு (FBI), போதைப்பொருள் அமலாக்க பிரிவு (DEA), சமூக பாதுகாப்பு அதிகாரிகள் போல் தொலைபேசியில் மிரட்டியுள்ளனர்.
பின்பு இந்த மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் ஷெஷத்கான் பதான் உட்பட 6 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அமெரிக்காவின் வாஷிங் டன் மாகாணம் வர்ஜீனியா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
ஏற்கனவே மூவர் தண்டனை பெற்ற நிலையில் நான்காம் நபரான பதானுக்கு நீதிமன்றம் 22 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
வழக்கில் சிக்கியுள்ள அஹமதாபாதைச் சேர்ந்த பிரத்சிபின் பர்மார் (41), சம்மர் படேல் (38) ஆகியோருக்கு வரும் 20-ஆம் திகதி தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.