ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியன் ஆயில்!
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் இறுதி செய்துள்ளதாக் அத்தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ரஷ்ய எண்ணெய் நிறுவனத்துடன் 3 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது ஒரு நிறுவனத்திற்கும் மற்றோரு நிறுவனத்திற்கு இடையிலான ஒப்பந்தம் (company-to-company), என கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான மாஸ்கோவின் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் எண்ணெய் இறக்குமதி தடை உள்ளிட்ட பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்த தடையும் இல்லை.
Photo Credit: AFP
இந்நிலையில், இந்தியாவின் முறையான எரிசக்தி பரிவர்த்தனைகள் அரசியலாக்கப்படக் கூடாது, எண்ணெய் வளத்தில் தன்னிறைவு பெற்ற நாடுகளோ அல்லது ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகளோ கட்டுப்பாட்டு வர்த்தகத்தை நம்பகத்தன்மையுடன் ஆதரிக்க முடியாது என்று அரசாங்க வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
ஆனால், இதற்கு அமெரிக்காவிடமிருந்து ஒரு பதில் கிடைத்தது - ரஷ்யாவிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வது பொருளாதாரத் தடைகளை மீறுவதாக இருக்காது; அது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஆதரிப்பதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
தகவல்களின்படி, ரஷ்ய எண்ணெய் நிறுவனத்துடனான கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம், சர்வதேச சந்தையில் தற்போது இந்தியாவுக்குக் கிடைக்கும் சிறந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் உள்ளது. ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்த தடையும் இல்லை என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய நாடுகளும் மாஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததால், ரஷ்யா இந்தியாவிற்கும் பிற பெரிய இறக்குமதியாளர்களுக்கும் தள்ளுபடி விலையில் எண்ணெய் மற்றும் பிற பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆழ்ந்த தள்ளுபடியின் நம்பிக்கையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை ரஷ்ய நிறுவனங்களுடன் இறுதி செய்ய வாய்ப்புள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டொலருக்கு மேல் உயர்ந்துள்ள நேரத்தில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு ஒரு கட்டத்தில் ப்ரெண்ட் கச்சா ஒரு பீப்பாய்க்கு 140 டொலருக்கு அருகில் பல ஆண்டு உச்சத்தைத் தொட்டது.
இந்தியா தனது எரிசக்தித் தேவைகளில் 80 சதவீதத்திற்கும் மேலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதையே பெரிதும் நம்பியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் இந்தியாவிற்கும் ரஷ்ய கூட்டமைப்பிற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உயர்மட்ட தொடர்பைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் முன்னணி எரிசக்தி நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஏற்கனவே 3 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது, இது நடைமுறையில் உள்ள சர்வதேச விலையில் ரஷ்யா அதிக தள்ளுபடியில் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.