இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிச் சிறுவன் குத்திக்கொல்லப்பட்ட வழக்கு: மேலும் ஒருவர் கைது
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிச் சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் மாதம் 29ஆம் திகதி, ரோனன் கந்தா (Ronan Kanda, 16) என்ற பதின்ம வயது சிறுவன் Lanesfield என்ற இடத்தில் கத்தியால் குத்தப்பட்டான்.
தகவலறிந்து வந்த பொலிசார், மருத்துவக் குழுவினரால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்றும், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக பர்மிங்காமைச் சேர்ந்த Josiah Francis (20) என்ற நபரும், அவருடன் இரண்டு 16 வயது சிறுவர்களும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், நான்காவதாக பர்மிங்காமைச் சேர்ந்த Joseph Whittaker என்ற நபரும் ரோனன் வழக்கு தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ரோனனை அவர்கள் எதற்காகக் கத்தியால் குத்திக்கொன்றார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
Joseph இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.
iamge - WEST MIDLANDS POLICE