கனடாவில் விமான விபத்தில் மீண்டும் ஒரு கேரள இளைஞர் பலி
கனடாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கேரள இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கேரள இளைஞர் பலி
கனடாவின் Newfoundland and Labrador மாகாணத்தில், வான்வழி ஆய்வு நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றிவந்தவர் கௌதம் சந்தோஷ் (27).
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கௌதம், சனிக்கிழமையன்று நிகழ்ந்த விமான விபத்தொன்றில் பலியானார்.
அவர் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியதில், அந்த விமானத்தின் விமானியான 54 வயது நபரும், கௌதமும் பலியாகிவிட்டார்கள்.
With deep sorrow, we mourn the tragic passing of Mr. Gautam Santhosh, an Indian national, who lost his life in an accident involving a commercial survey aircraft near Deer Lake, Newfoundland.
— IndiainToronto (@IndiainToronto) July 28, 2025
We extend our heartfelt condolences to his family during this difficult time. The…
ரொரன்றோவிலுள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், விமான விபத்தில் பலியான கௌதம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், அவரது குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே "Mayday" அறிவிப்பு! போயிங் 787 விமானம் விபத்து நேராமல் தப்பியது எப்படி?
இந்நிலையில், இம்மாதம் 8ஆம் திகதி விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மற்றொரு பயிற்சி விமானத்துடன் மோதி பலியான ஸ்ரீஹரி சுகேஷ் என்பவரும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |