வாஷிங்டன் தெருவில் அடித்தே கொல்லப்பட்ட ஆசிய நாட்டவர்: மர்ம நபருக்கு அதிகாரிகள் வலைவீச்சு
அமெரிக்காவில் குடியிருக்கும் இந்தியர் ஒருவர் வாஷிங்டன் நகர உணவகம் ஒன்றின் வெளியே மர்ம நபரால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மர்ம நபரால் கொடூரமாக
அமெரிக்காவின் Virginia மாகாணத்தில் குடியிருந்து வருபவர் 41 வயதான Vivek Taneja. இவரே பிப்ரவரி 2ம் திகதி ஜப்பானிய உணவகம் ஒன்றில் உணவருந்திவிட்டு வெளியேறிய நிலையில், மர்ம நபரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
இதில் நிலைகுலைந்து தடுமாறி தரையில் விழுந்தவரின் தலை நடைபாதையில் பலமாக மோதியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் குற்றுயிராக மீட்கப்பட்ட அந்த இந்தியர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
Credit: Dynamo Technologies
ஆண்டு பிறந்து 40 நாட்களில் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை 6 என உயர்ந்துள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணிக்கு Taneja அந்த உணவகத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த உணவகத்திற்கு மிக அருகாமையில் உள்ள தெருவில் Taneja-வுக்கும் அந்த மர்ம நபருக்கும் சண்டை மூண்டுள்ளது. சண்டைக்கு காரணம் என்ன என்பது தொடர்பில் தகவலேதும் இதுவரை வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.
அடையாளம் காணப்படவில்லை
சம்பவயிடத்தில் பொலிசார் வந்து பார்த்தபோது, தாக்குதலில் சுயநினைவை இழந்த நிலையில் அவர் காணப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் காயங்கள் காரணமாக புதன்கிழமை அவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
கண்காணிப்பு கமெராவில் அவர் முகம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அவர் அடையாளம் காணப்படவில்லை. தற்போது இந்த சம்பவம் தொடர்பில் உரிய தகவல் அளிக்கும் நபருக்கு 25,000 டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |