10 வயது மகனை பட்டினி போட்டு கொன்ற இந்திய வம்சாவளி தாய்: அழுகிய நிலையில் உடல் மீட்பு
இந்திய வம்சாவளி தாய், 10 வயது மகனுக்கு வேண்டுமென்று உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 வயது மகன் பட்டினி
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் மோரிஸ்வில்லி பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா திவாரி (33). இவர் கணவரை பிரிந்து தனது 10 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை இவரிடமிருந்து பொலிஸாருக்கு அழைப்பு வந்துள்ளது. உடனே, வீட்டிற்கு வந்த பொலிஸார் 10 வயது மகன் மூச்சு, பேச்சில்லாம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், சிறுவனுக்கு CPR சிகிச்சை அளித்தனர். ஆனாலும், சிறுவன் மீளவில்லை. அப்போது தான் சிறுவன் உயிரிழந்து நீண்ட நேரம் ஆகியிருக்கலாம் என்பதை பொலிஸார் உறுதி செய்தனர். மேலும், சிறுவனின் உடல் அழுகிய நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, வீடு முழுவதும் பொலிஸார் நடத்திய சோதனையில் உணவு பொருட்கள் ஏதும் இல்லை. கடந்த ஒரு மாதமாக சிறுவனின் தாய், மகனுக்கு வேண்டுமென்று உணவு கொடுக்காமல் பட்டினி போட்டும், கொடூரமாக தாக்கியதாலும் உயிரிழந்தார் என பொலிஸார் கூறினர்.
தாயார் கைது
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சிறுவனின் தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், பிரேத பரிசோதனைக்கு பிறகே சிறுவன் மரணம் குறித்த தகவல் தெரிய வரும். நீதிமன்ற விசாரணையில் பிரியங்கா திவாரியை ஜாமீன் இல்லாமல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, கடந்த மார்ச் 30 -ம் திகதி பொலிஸார் உதவியுடன் பிரியங்கா திவாரியின் கணவர் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
இதில், பிரியங்கா திவாரி மனநல பிரச்சனையில் உள்ளாரா என்றும் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |