எலோன் மஸ்க்கிற்கு அடுத்து... உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளி CEO
எலோன் மஸ்க்கிற்கு அடுத்தபடியாக உலகில் அதிக சம்பளம் வாங்கும் CEO ஆக இந்திய வம்சாவளி சங்க் மித்ரா உள்ளார்.
சங்க் மித்ரா
டெஸ்லா நிறுவனத்திடமிருந்து 158.4 பில்லியன் டொலர் ஊதியத் தொகுப்புடன், உலகில் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகி பட்டியலில் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

எலான் மஸ்க்கிற்கு அடுத்தபடியாக அதிக ஊதியம் பெறும் நிர்வாகிகள் பட்டியலில் இந்திய வம்சாவளியான சங்க் மித்ரா(Shankh Mitra) இடம் பிடித்துள்ளார்.
வெல்டவர்(Welltower) நிறுவனத்தின் தலைமைக்கு நிர்வாக அதிகாரியாக உள்ள சங்க் மித்ரா 821 மில்லியன் டாலர் (சுமார் 7,061 கோடி ரூபாய்) ஊதியத் தொகுப்பைப் பெற்றுள்ளார்.
மித்ராவின் சம்பளத்தில் 99% பங்கு மானியங்களாகவே இருந்தன. இதில் அக்டோபர் மாதம் வழங்கப்பட்ட 789 மில்லியன் டாலரும் அடங்கும்.
வெல்டவர் நிறுவனம் என்பது மூத்த குடிமக்களுக்கான வீட்டுவசதி மற்றும் சுகாதாரத் துறைகளில் கவனம் செலுத்தும் ஒரு ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை ஆகும்.

இந்தியாவில் பிறந்து கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கருவியியல் மற்றும் மின்னணுவியல் பொறியியலில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றார்.
பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, கொலம்பியா வணிகப் பள்ளியில் பயன்பாட்டு மதிப்பு முதலீட்டில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

PwCயில் தொடங்கிம் ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட், சிட்டாடல் மற்றும் மில்லினியம் மேனேஜ்மென்ட் என பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய சங்க் மித்ரா, 2016 ஆம் ஆண்டில் வெல்டவரில் இணைந்தார்.
அங்கு, நிதி மற்றும் முதலீடுகளின் மூத்த துணைத் தலைவராகப் பணியில் சேர்ந்த அவர், முதலீடுகளின் தலைவர், தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரி என பல்வேறு பதவிகளை வகித்தார். 2020 ஆம் ஆண்டில் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
நிகேஷ் அரோரா
மேலும், வெல்டவரின் மற்ற 3 நிர்வாகிகளும் தலா 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான ஊதியத் தொகுப்புகளைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில், மற்றொரு இந்திய வம்சாவளி நிர்வாகியான நிகேஷ் அரோரா, 100 மில்லியன் டொலர் ஊதியத் தொகுப்புடன் 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவில் பிறந்து வளர்ந்த நிகேஷ் அரோரா, அமெரிக்காவில் உள்ள சைபர் பாதுகாப்பு நிறுவனமான பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் (Palo Alto Networks, Inc) தலைமை நிர்வாகியாக உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |