அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற இந்திய வம்சாவளி மாணவி கைது
அமெரிக்கப் பல்கலை ஒன்றில், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி மாணவி கைது
அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் அமைந்துள்ள Princeton பல்கலையில் பயிலும் அச்சிந்த்யா சிவலிங்கம் என்னும் மாணவி, பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று, அதாவது, ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி, வியாழக்கிழமை, அச்சிந்த்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த அச்சிந்த்யாவுக்கு பல்கலை வளாகத்தில் தங்கியிருக்க இடம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்து நிமிடங்களுக்குள் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதுடன், மீண்டும் பல்கலை வளாகத்துக்குள் நுழையவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |