இந்திய இளம்பெண் மர்ம மரணம்: அமெரிக்காவில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 10ஆனது
அமெரிக்காவில் கல்வி கற்று வந்த இந்திய இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய இளம்பெண் மர்ம மரணம்
உமா (Uma Satya Sai Gadde) என்னும் மாணவியே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளதாகவும், நேற்றிரவு, நியூயார்க்கிலுள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
Deeply saddened by the unfortunate demise of Mr. Uma Satya Sai Gadde, an Indian student in Cleveland, Ohio.
— India in New York (@IndiainNewYork) April 5, 2024
Police investigation is underway. @IndiainNewYork continues to remain in touch with the family in India.
All possible assistance is being extended including to transport…
எக்ஸில் வெளியிடப்பட்டுள்ள செய்தி ஒன்றில், உமாவின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள இந்திய துணை தூதரகம், அது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும், விரைவில் உமாவின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த உமாவுடன் சேர்த்து, இந்த ஆண்டில் அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |