பத்திரிக்கையாளர்களுக்கான உயரிய விருதை பெற்ற தமிழக வம்சாவளியைச் சேர்ந்த லண்டன் பெண்!
தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட லண்டன் பெண்ணுக்கு அமேரிக்காவின் பத்திரிக்கையாளர்களுக்கான உயரிய விருது வழங்கபட்டுள்ளது.
உலகில் ஊடகத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகம் ஆண்டுதோறும், 21 பிரிவுகளில் புலிட்சர் (Pulitzer) விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்நிலையில், 105-வது ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட லண்டனில் வசிக்கும் மேகா ராஜகோபாலன் சர்வதேச செய்தியாளருக்கான புலிட்சர் விருதை பெற்றுள்ளார். இவர் BuzzFeed News எனும் நிறுவனத்தில் சர்வதேச நிருபராக உள்ளார்.
இவர் சீனாவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த உய்குர் முஸ்லிம்கள் (Uighur Muslims) தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டாதற்காக இந்த விருதை பெறுகிறார்.
விருது கிடைத்ததற்கு நன்றி தெரிவித்து மெகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் "எங்களுக்கு ஆதரவளித்த BuzzFeed News, Alex Campbell-க்கும் மற்றும் பிற நிறுவனங்களுக்கும், எங்கள் அணிக்கு மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.
சின்ஜியாங்கின் முகாம்களுக்குள் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று எங்களிடம் கூறிய முன்னாள் கைதிகளுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அவர்களின் தைரியத்திற்கு அம்மக்கள் கடன்பட்டிருக்கிறார்கள்.
இன்னும் பல வேலைகள் செய்ய வேண்டியுள்ளது" என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க பத்திரிகையாளர் நைல் பேடி (Neil Bedi) உள்ளூர் செய்திக்கான பிரிவில் புலிட்சர் விருது பெற்றுள்ளார். Tampa Bay Times பத்திரிக்கை நிருபரான இவர், தான் வெளியிட்ட புலனாய்வு செய்திகளுக்காக இந்த விருதை பெற்றுள்ளார்.
Am so grateful to our team, to @BuzzFeedNews, @alexcampbell & the organizations that supported us.
— Megha Rajagopalan (@meghara) June 11, 2021
Most of all I'm grateful to ex-detainees who told us what happened to them inside Xinjiang's camps. The public owes much to their courage.
Still much more work to be done. https://t.co/IEylM09S5r