அமெரிக்காவில் மகனின் கழுத்தை அறுத்துக் கொன்ற இந்திய வம்சாவளி பெண்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்ணொருவர் தனது மகனை கழுத்தறுத்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
கணவர் மேல் வெறுப்பு
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் சரிதா ராமராஜு (48) என்ற பெண், தனது கணவரை விவாகரத்து செய்ததால் தனியாக வாழ்ந்து வருகிறார்.
அவரது முன்னாள் கணவர் பிரகாஷ் ராஜு மகன் எதின் ராமராஜு உடன் கலிபோர்னியாவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் மகனை தன்னுடன் அழைத்துச் சென்ற சரிதா, பேர்பெக்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் தங்கவைத்துள்ளார்.
மூன்று நாட்கள் மட்டுமே மகன் தன்னுடன் இருக்க முடியும் என்ற நிலையில், கடந்த 18ஆம் திகதி டிஸ்னிலேண்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ஹொட்டலில் இருவரும் தங்கியிருந்தனர்.
மகனை கொன்ற தாய்
அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்து மறுநாள் கணவரிடம் மகனை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையில், எதினின் கழுத்தை அறுத்து தாய் சரிதா கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பின்னர் அவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார். அதே சமயம், பொலிஸாருக்கும் போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலமாக கிடந்த எதினை மீட்டனர். மேலும், மயங்கிய நிலையில் இருந்த சரிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |