பெற்ற மகளைக் கொன்ற இந்திய வம்சாவளி பெண்: கொல்லப்பட்டது எப்படி? அதிகாரிகள் தகவல்
இங்கிலாந்தில், பெற்ற மகளைக் கொலை செய்ததாக இந்திய வம்சாவளிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குழந்தை எப்படி கொல்லப்பட்டாள் என்னும் தகவலை நீதிமன்ற விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்
இங்கிலாந்திலுள்ள Rowley Regis என்னுமிடத்திலுள்ள வீடொன்றிற்கு, இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 4ஆம் திகதி, இரவு 12.10 மணியளவில் பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.
பொலிசார் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு Shay Kang (10) என்னும் சிறுமி படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறாள். மருத்துவ உதவிக்குழுவினர் அவளைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலிக்காமல், Shay Kang பரிதாபமாக பலியாகிவிட்டாள்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக Shay Kangஇன் தாயாகிய ஜஸ்கிரத் கௌர் என்னும் ஜாஸ்மின் கேங் (Jaskirat Kaur, also known as Jasmine Kang, 33) கைது செய்யப்பட்டார்.
Credit: PA
குழந்தை கொல்லப்பட்டது எப்படி?
இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற அதிகாரிகள் விசாரணை நடத்திவந்த நிலையில், குழந்தை கொல்லப்பட்டது எப்படி என்ற தகவலை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளார்கள்.
குழந்தை Shay Kangஇன் மார்பில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதாவது Shay Kang கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளாள்.
இதற்கிடையில், ஜாஸ்மின், Wolverhampton கிரௌன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் குற்றம் செய்ததை ஒப்புக்கொள்ளவும் இல்லை, எதற்காக குழந்தையை அவர் கொலை செய்தார் என்பதும் தெரியவரவில்லை. மீண்டும், ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
Credit: PA