பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி மருத்துவர் தற்கொலை: நீதிக்குப் போராடும் தந்தை
பிரித்தானியாவிலுள்ள மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் வைஷ்ணவி குமாரை சக ஊழியர்கள் இழிவுபடுத்தி வந்ததால் மனமுடைந்து போனவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மோசமான சூழல்
பிரித்தானியாவிலுள்ள பர்மிங்காம் குயின் எலிசபெத் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் வைஷ்ணவி குமார் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அளவுக்கு அதிகமாக மருந்தை உட்கொண்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் இறக்கும் போது கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் அவரது தந்தை கூறியுள்ளார்.
அந்த கடிதத்தில் குயின் எலிசபெத் மருத்துவமனையில் தன்னோடு பணிபுரிபவர்கள் மோசமாக என்னை இழிவு படுத்துகிறார்கள் என எழுதியிருக்கிறார். அளவுக்கு அதிகமாக மருந்தை உட்கொண்டவர் மூன்று மணி நேரம் கழித்து ஆம்புலன்ஸை அழைத்துள்ளார்.
அப்போது அவரை அழைத்துச் சென்ற தனது தந்தையிடம்” தயவு செய்து குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு மட்டும் என்னை அழைத்து செல்லாதீர்கள்” என கூறியுள்ளார்.
நீதிக்காக போராடும் தந்தை
வைஷ்ணவி குமாரின் தந்தையும் ஒரு மருத்துவர் என்பதால் அவரால் இந்த நிலையைப் புரிந்து கொள்ள முடிவதாக கூறியுள்ளார்.
“அவள் மிகவும் கேளிக்கையான பெண், எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள்” என கூறிய அவரது தந்தை “ஆனால் எலிசபெத் மருத்துவமனையில் பணிபுரியத் துவங்கியதிலிருந்து அவளுடைய குணங்கள் மாறிவிட்டன” என்கிறார்.
"சில ஆலோசகர்களிடம் பணி சார்ந்த தரவை ஒப்படைக்கும் போது அவள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தாள், ஏனெனில் ஒப்படைப்பின் போது அவர்கள் அவளிடம் பழகிய விதம், அவளது சிகிச்சைகள் பற்றி கூறி கிண்டல் செய்து சிரித்தது.
"அதிலும் அந்த நபர் மிகவும் மூத்த மருத்துவர் என்பதாலும், அனுபவம் வாய்ந்தவராகவும், மற்ற அனைவராலும் விரும்பப்பட்டவராகவும் இருந்ததால், அது அவளைப் பாதித்து இருக்கிறது." என தெரிவித்துள்ளார்.
தினம் தினம் போராட்டம்
பர்மிங்காம் பல்கலைக்கழக மருத்துவமனைகளின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: டாக்டர் வைஷ்ணவி குமார் மிகவும் அன்பும் மரியாதையும் பெற்ற மருத்துவர், சக ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.
"அவரது எதிர்பாராத மரணம் வருத்தத்திற்குரியது, வைஷ்ணவியின் குடும்பத்தாருடன் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். வைஷ்ணவியின் மரணத்திலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டோம், அதன்படி செயல்படுகிறோம்.”
@googlemaps
"டாக்டர் குமார் தனது மகளின் மரணம் அனைத்து மருத்துவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் ஆதரவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அறக்கட்டளையின் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் விரும்புகிறார். அவர் அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்."
பேராசிரியர் பெவிக் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு அதற்கு பதிலளிப்பதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.