இந்திய வம்சாவளி இளைஞரை சுட்டுக்கொன்ற அமெரிக்க பொலிசார்: பின்னணி
இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர், அமெரிக்க பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பின்னணி
அமெரிக்காவின் சான் அன்டோனியோவில், சச்சின் சாஹூ (42) என்னும் இந்திய வம்சாவளி இளைஞர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சச்சின் சாஹூ.
அமெரிக்காவில், Cheviot Heights என்னுமிடத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த சச்சின், தன்னுடன் அறையில் தங்கியிருந்த ஒருவரை பயங்கர ஆயுதம் கொண்டு தாக்கியதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்வதற்காக அங்கு சென்றுள்ளார்கள்.
சச்சினை அவர்கள் கைது செய்ய முயலும்போது, அவர் தனது வாகனத்தைக் கொண்டு பொலிசார் இருவர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. அப்போது, பொலிசார் ஒருவர் சச்சினை துப்பாக்கியால் சுட, அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |