ஜேர்மன் பூங்காவில் இந்திய மலைப்பாம்பு உயிரற்ற நிலையில் கண்டுபிடிப்பு; மக்களுக்கு அதிகாரிகள் விடுத்துள்ள கோரிக்கை
ஜேர்மன் தலைநகர் பெர்லினிலுள்ள பூங்கா ஒன்றில் 4 மீற்றர் நீள மலைப்பாம்பு ஒன்று உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அது தொடர்பாக அதிகாரிகள் தகவல் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
ஜேர்மன் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மலைப்பாம்பு
நேற்று, ஜேர்மன் தலைநகர் பெர்லினிலுள்ள Neukölln என்னுமிடத்தில் உள்ள பூங்கா ஒன்றில், ஒரு மரத்தினடியில் 4 மீற்றர் நீள இந்திய மலைப்பாம்பு ஒன்று உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த மலைப்பாம்பு சரியான உணவளிக்கப்படாததுபோல் காணப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அது சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டுவந்ததா என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
அந்த மலைப்பாம்பு உயிரிழந்ததால் அங்கு கொண்டு போடப்பட்டதா அல்லது அங்கு கொண்டு போடப்பட்ட அந்த பாம்பு அதற்குப் பின் உயிரிழந்ததா என பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அந்த மலைப்பாம்பைக் குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் தங்களுக்குத் தெரிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
Wir sind ja einiges gewohnt im Bezirk, aber das hatten wir auch noch nicht: Gestern haben unsere Mitarbeitenden in der #Hasenheide einen 4 m langen toten #Tigerpython entdeckt. Die genauen Hintergründe ermitteln nun unsere Amtstierärzt:innen. Details ⬇️https://t.co/rxGNhZTQtt pic.twitter.com/GlGjfl8hgW
— Bezirksamt Neukölln (@BerlinNkl) February 13, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |