ஜூலை 1 முதல் உயரும் ரயில் பயண கட்டணம் - அதிர்ச்சியில் பயணிகள்
இந்தியாவில் ரயில் பயண கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பயணத்திற்காக பெரும்பாலானோர் ரயில்களை தேர்ந்தெடுப்பதற்கு, அதன் குறைவான கட்டணமும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ரயில் கட்டண உயர்வு
இந்நிலையில், ஜூலை 1 முதல் ரயிலில் பயண கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், புறநகர் ரயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
சாதாரண இரண்டாம் வகுப்பில், 500 கி.மீ வரையிலான தூரங்களுக்கு கட்டணம் உயர்த்தப்படாது. 500 கி.மீக்கு மேல் உள்ள தூரங்களுக்கு, கிலோமீட்டருக்கு அரை பைசா அதிகரிக்கும்.
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் (ஏசி அல்லாத) ரயில்களில், கட்டணம் கிலோமீட்டருக்கு 1 பைசா அதிகரிக்கும். ஏசி வகுப்புகளில், கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 1 முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுகளுக்கு ஆதார் அங்கீகாரம் அவசியம் என்று இந்திய ரயில்வே முன்னதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |