கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணொருவர் சாலை விபத்தொன்றில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்
ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயியான அட்லூரி வசந்தராவின் மகள் பிரசன்னா அட்லூரி (25).

உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற அட்லூரி, சமீபத்தில்தான் தன் பட்டப்படிப்பை முடித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, நியூயார்க்கிலுள்ள கோவில் ஒன்றிற்கு காரில் சென்றுள்ளார் பிரசன்னா. அவருடன் மூன்று பேர் பயணித்துள்ளார்கள்.
நியூயார்க்கில் அவரது கார் சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார் ஒன்று நின்றுகொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது.
இந்த துயர விபத்தில், பிரசன்னாவும், அவருடன் பயணித்த மற்றொருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மற்ற நபர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
தங்கள் சேமிப்பு முழுவதையும் செலவிட்டுத்தான் பிரசன்னாவை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளனர் அவரது பெற்றோர்.

இந்நிலையில், மகள் படித்து முடித்தாயிற்று, இனி தாங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் பிரசன்னாவின் பெற்றோர் காத்திருக்க, மகள் உயிரிழந்துவிட்ட செய்தி கேட்டு அந்தக் குடும்பம் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது.
ஏற்கனவே பிரசன்னாவின் கல்விக்கடனை அடைக்க பணம் தேவைப்படும் நிலையில், என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போயுள்ள அவரது குடும்பத்தினர், தங்கள் மகள் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |