கனடாவில் இந்திய மாணவர் படுகொலை: அதிர்ச்சியில் குடும்பம்
கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கனடாவில் இந்திய மாணவர் கொலை
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த குர்கிரத் சிங் (Gurkirat Singh Manocha, 23), மேல் படிப்புக்காக கனடா சென்றிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ஒரு கும்பல் அவரைத் தாக்கி படுகொலை செய்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Northern Lights கல்லூரியில் முதுகலைப் பட்டயப்படிப்பு படித்துக்கொண்டிருந்தார் சிங்.
படித்துக்கொண்டே வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றில் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டிருந்த சிங், இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 14ஆம் திகதி, வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, 10 முதல் 12 பேர் வரை கொண்ட ஒரு கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது.
மேலும், அவர் மீது வாகனம் ஒன்றையும் ஏற்றிச் சென்றுள்ளது அந்தக் கும்பல்.
படுகாயமடைந்த சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கின் மரணச் செய்தி கேட்டு இந்தியாவிலிருக்கும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், உடற்கூறு ஆய்வு, பின் பொலிஸ் விசாரணை என நடடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளதால், அவரது உடல் இந்தியா வர மூன்று வாரங்கள் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எங்கள் பிள்ளையின் உடல் சீக்கிரமாக இந்தியாவுக்கு வரவேண்டும், அவனுக்கு இறுதிச்சடங்காவது செய்யமுடிந்தால் போதும் என்று கூறுகிறார் சிங்கின் தந்தை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |