பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர்கள் பலியான சம்பவம்: உயிரைப் பறித்த செல்பி மோகம்
பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் சென்ற மாணவர்கள் இருவர், சுற்றுலாத்தலம் ஒன்றில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த விடயம் தொடர்பில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் சென்ற மாணவர்கள்
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர், புதன்கிழமையன்று, ஸ்கொட்லாந்திலுள்ள பிரபல சுற்றுலாத்தலம் ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள்.
Garry மற்றும் Tummel என்னும் இரு நதிகள் சந்திக்கும் இடத்திலுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றிற்கு அவர்கள் சென்றிருந்த நிலையில், அவர்களில் இரண்டுபேர் தண்ணீரில் மூழ்கியதாக தகவல் வெளியாகியிருந்தது.
அவர்களுடைய நண்பர்கள் உடனடியாக அவசர உதவியை அழைத்தும், தண்ணீரில் விழுந்தவர்களை உயிருடன் மீட்கமுடியாமல் போயுள்ளது.
சமீபத்திய தகவல்கள்
தற்போது, உயிரிழந்த மாணவர்கள் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. Jitendranath Karuturi (26) மற்றும் Chanhakya Bolisetti (22) என்னும் அந்த இருவரும், Dundee பல்கலையில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்கள்.
அத்துடன், பலியான மாணவர்கள் இருவரும் செல்பி எடுக்க முயலும்போது தவறி விழுந்து பலியானதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |