பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்
பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் சென்ற மாணவர்கள் இருவர், சுற்றுலாத்தலம் ஒன்றில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் சென்ற மாணவர்கள்
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர், புதன்கிழமையன்று, ஸ்கொட்லாந்திலுள்ள பிரபல சுற்றுலாத்தலம் ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள்.
Garry மற்றும் Tummel என்னும் இரு நதிகள் சந்திக்கும் இடத்திலுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றிற்கு அவர்கள் சென்றிருந்த நிலையில், அவர்களில் இரண்டுபேர் தண்ணீரில் மூழ்கியுள்ளார்கள்.
அவர்களுடைய நண்பர்கள் உடனடியாக அவசர உதவியை அழைத்தும், தண்ணீரில் விழுந்தவர்களை உயிருடன் மீட்கமுடியாமல் போயுள்ளது.
22 மற்றும் 27 வயதுடைய அந்த மாணவர்கள் இருவரும் Dundee பல்கலையில் கல்வி பயின்றுவந்த மாணவர்கள் ஆவர்.
உயிரிழந்த இருவருக்கும் இன்று உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் நிலையில், அவர்களுடைய உடல்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |