உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த பிரபல வீரர் மாரடைப்பால் மரணம்! தமிழக வீரர் உருக்கமான பதிவு
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் யஷ்பல் சர்மா மாரடைப்பால் காலமானார்.
66 வயதான யஷ்பல் சர்மா டெல்லியில் வசித்து வந்த நிலையில் உயிரிழந்தார். இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக கடந்த 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாதனை படைந்தது.
அப்போது அந்த அணியில் ஒரு வீரராக விளையாடியுள்ளார் யஷ்பல் சர்மா. மறைந்த சர்மாவுக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1606 ரன்களும், 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 883 ரன்களும் சர்மா எடுத்துள்ளார்.
So sorry to hear about #YashpalSharma Paaji 's passing away, one of the heroes of our 1983 WC win. Heartfelt condolences. Om Shanti. pic.twitter.com/Toh3wLHNAw
— Virender Sehwag (@virendersehwag) July 13, 2021
கடந்த 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் முக்கியமான அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சர்மா அரை சதம் அடித்ததை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது.
அவரின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
யஷ்பல் சர்மாவுடன் 1983 உலகக்கோப்பை தொடரில் இணைந்து விளையாடிய தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எனது நண்பரும், முன்னாள் அணியின் சக வீரருமான யஷ்பல் சர்மாவின் மறைவு செய்தியை கேட்டு வருத்தமடைந்தேன்.
1983 உலகக் கோப்பையைத் இந்தியா வெல்ல எங்களுக்கு உதவிய முக்கிய ஹீரோக்களில் இவரும் ஒருவர்! அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.
Sad to hear the demise of my former team mate and friend #YashpalSharma! He was one of the main heroes who helped us lifting the 1983 world cup! May his soul rest in peace 🙏!
— Kris Srikkanth (@KrisSrikkanth) July 13, 2021