கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்! காரணம் என்ன?
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நேற்று தொடங்கவிருந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் டொஸ் போடப்பட்டு, போட்டி தொடங்கப்பட்டது.
டொஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது, இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக சிப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் சிகிச்சை பலனின்றி காலமான செய்தி வீரர்களுக்கு தெரியவந்தது.
இதனையடுத்து மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
உணவு நேர இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள ்எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.