லண்டனில் இந்திய இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு: மன நல காப்பகத்தில் குற்றவாளி
உயர் கல்வி கற்பதற்காக பிரித்தானியா சென்றிருந்த இந்திய இளம்பெண் ஒருவர், பிரேசில் நாட்டு இளைஞர் ஒருவரால் கொல்லப்பட்ட வழக்கில், அந்த இளைஞர் மன நல காப்பகத்தில் அடைக்கப்பட்டார்.
ஹைதராபாத் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு
இந்தியாவின் ஹைதராபாதைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி (Kontham Tejasvini, 27). கடந்த ஆண்டு, ஜூன் மாதம் 14ஆம் திகதி, லண்டனில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த தேஜஸ்வினியையும், அவருடன் தங்கியிருந்த அகிலா (Akhila Janagama, 28) என்பவரையும், அதே குடியிருப்பில் தனது காதலியுடன் தங்கியிருந்த பிரேசில் நாட்டவரான கெவின் (Keven Antonio Lourenco De Morais, 25) என்னும் இளைஞர் கத்தியால் குத்தினார்.
மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தும், தேஜஸ்வினியைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அகிலா உயிர் பிழைத்துவிட்டார்.
தண்டனை அறிவிப்பு
தேஜஸ்வினியையும், அகிலாவையும் கத்தியால் குத்திய கெவின், தன் காதலியை அழைத்து, நான் அந்த இந்தியப் பெண்களைக் கொன்றுவிட்டேன் என்று கூறியுள்ளார். பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள்.
ஆறு மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கில், கெவின் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனாலும், அவர் paranoid schizophrenia என்னும் மன நல பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதால், வியாழக்கிழமையன்று, அவரை மன நல காப்பகத்தில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, கெவின் Beckenham என்னுமிடத்தில் உள்ள Bethlem Royal Hospital என்னும் மன நல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |