இந்தியர்களை மோசமாக விமர்சிக்கும் அவுஸ்திரேலிய சாரதிகள்: அதிரவைத்துள்ள ஆதாரம்
அவுஸ்திரேலியாவில், இந்திய சாரதிகள் கடும் இனவெறுப்பை எதிர்கொள்வதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
இந் நிலையில், அதற்கு ஆதாரமாக வெளியாகியுள்ள ஆடியோ ஒன்று அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இனவெறுப்பை எதிர்கொள்ளும் இந்திய சாரதிகள்
அவுஸ்திரேலியாவில், ட்ரக் சாரதிகள் சாலை பாதுகாப்பு போன்ற விடயங்களுக்காக தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக ரேடியோக்களை பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில், அப்படி ரேடியோவில் பேசும்போது, அவுஸ்திரேலிய சாரதி ஒருவர் இந்தியர்களை மோசமாக விமர்சிக்கும் ஆடியோ ஒன்றை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார் ஒருவர்.

அந்த ஆடியோவில், இந்தியர்களை கெட்ட வார்த்தைகளால் விமர்சிக்கும் அந்த அவுஸ்திரேலிய சாரதி, ’இந்தியர்களைக் கொல்லவேண்டும், உள்நாட்டு யுத்தம் ஒன்று வருகிறது, நாம் இந்திய ஆண்கள் அனைவரையும் கொல்லப்போகிறோம், இந்தியக் குழந்தைகளை தண்ணீரில் மூழ்கடிக்கப்போகிறோம், இந்தியப் பெண்களை அடிமைகளாக விற்கப்போகிறோம்’ என்று கூறுவதை கேட்கமுடிகிறது.
இது குறித்து இந்திய சாரதிகளிடம் விசாரித்தால், நீங்கள் பேசும் தொனி இந்தியர் அல்லது வட இந்தியர் போல் ஒலித்தால் நீங்கள் மோசமான துன்புறுத்தலை எதிர்கொள்வீர்கள் என்கிறார்.
தன் வாகனத்தை சர்வீஸ் செய்வதற்காக விட்டிருந்த பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர், ஓரமாக நின்று தன் மனைவியுடன் மொபைலில் பேசிக்கொண்டிருந்தாராம்.
அதை கவனித்த அவுஸ்திரேலியர் ஒருவர், இந்து அவுஸ்திரேலியா, ஆங்கிலத்தில் பேசு என கத்தினாராம். அத்துடன், அவர் செல்லும்போது இந்த இந்தியர் மீது எச்சில் துப்பிவிட்டுப் போனாராம். அந்த அவமானத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது என்கிறார் அவர்.
விடயம் என்னவென்றால், அவுஸ்திரேலியாவில் ட்ரக் சாரதிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த இடத்தை புலம்பெயர்ந்தோர்தான் நிரப்புகிறார்கள்.
அதுவும் வேறு வேலைகளுக்காக செல்லும் நன்கு படித்தவர்கள் கூட, தங்கள் சான்றிதழ்கள் அவுஸ்திரேலியாவில் ஏற்றுக்கொள்ளப்படாததால் கடைசியில் சாரதி வேலையை பார்க்கும் நிலை உள்ளதாம்.
ஆக, அவர்கள் நாட்டில் அந்த வேலைக்கு ஆட்கள் இல்லாத நிலையில், அதை நிரப்பும் தங்களை மோசமாக நடத்துவதாக இந்திய சாரதிகள் தெரிவிக்கிறார்கள்.
இதற்கிடையில், அவுஸ்திரேலியாவில் ட்ரக் சாரதிகளாக வேலை செய்வோரிடையே இனவெறுப்பு பிரச்சினை உள்ளது என்பது தங்கள் கவனத்துக்கும் வந்துள்ளதாக அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையமும் ஒப்புக்கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |