நாளுக்கு ஆயிரம் மரணம்... அச்சுறுத்தும் புதிய தொற்று: ராணுவத்தை களத்தில் இறக்கிய பிரதமர் போரிஸ்
இந்தியாவில் உருமாற்றம் கண்டுள்ள புதிய கொரோனா தொற்று பரவல் தொடர்பில் பிரித்தானிய நிபுணர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ராணுவத்தை களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உருமாற்றம் கண்டுள்ள புதிய கொரோனா தொற்று அடையாளம் காணப்படும் பகுதிகளில் ராணுவம் களமிறங்கும் எனவும், சோதனை உள்ளிட்ட சேவைகளை முன்னெடுக்கும் எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்திய தொற்றானது பிரித்தானியாவில் உருமாற்றம் கண்ட தொற்றை விடவும் 50% அபாயகரமானது எனவும் ஜூன் முதல் ஆகஸ்டு வரையான மாதங்களில் நாளுக்கும் 10,000 பேர் வரையில் பாதிப்புக்கு உள்ளாகலாம் எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் நாளுக்கு 1,000 மரணம் வரையில் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் உருமாற்றம் கண்ட தொற்று வேகமாக பரவி வருவது பிரதமர் ஜோன்சனை கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை இந்திய தொற்றால் பிரித்தானியாவில் நால்வர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
மேலும், கடந்த வாரத்தில் 520 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை இந்திய தொற்றால் 1313 என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.