லண்டனில் 400 பேருக்கு இந்த நாட்டின் புதிய வைரஸ் கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு! இளைஞர்களையே அதிகம் தாக்குவதாக அச்சம்?
இந்தியாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு, லண்டனில் 400 பேருக்கு புதிதாக பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாகும். தற்போது இங்கு பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது 400 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதம மந்திரி கூறுகையில், இந்த வாரம் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் மாறுபாட்டை விட 60 சதவீதம் அதிகமாக இருக்க கூடும் என்று கூறியுள்ளார். மேலும், ஆராய்ச்சியாளர்கள் இது இளைஞர்களை அதிகம் தாக்குவதாக கூறியுள்ளனர்.
வரும் ஜுன் 21-ஆம் திகதி அனைத்து ஊரடங்கிற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்று கூறப்படும் நிலையில், இந்த புதிய வைரஸ் பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல் படி பார்த்தால், பிரித்தானியாவில் இந்தியாவின் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் 1,313-ஆக உள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் மாறுபாடு அதிகரித்து வருவதாக பொது சுகாதார இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கொரோனா வைரஸ், உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சாத்தியமான வழக்குகள் லண்டனில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. வடமேற்கில் 319 பேருக்கும் தென்கிழக்கில் 98 பேருக்கும் இருப்பதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான வழக்குகள் இங்கிலாந்தில் பதிவாகியுள்ளன,
இந்தியாவில் பரவி வரும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் ஆன்டிபாடிகளுக்கு அதிக எதிர்ப்பாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுவது குறிப்பிடத்தக்கது.