பிரித்தானியாவில் கவலை அதிகரிக்கிறது! பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாட்டால் பிரித்தானியாவில் கவலை அதிகரிக்கிறது என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் நோய் பரவல் கண்டறியப்பட்ட நிலையில் பிரதமர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியா பாராளுமன்றத்தில் உரையாற்றி போரிஸ் ஜான்சன், தற்போது விஞ்ஞானிகள் நாட்டில் தொற்றுகள் குறைவதாக தகவல் அளித்தாலும், தற்போதும் வைரஸ் தொடர்பான அச்சுறுத்தல் இருக்கிறது மற்றும் புதிய மாறுபாடுகள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
ஊரடங்கின் முடிவு தொற்றின் முடிவு அல்ல. தொற்று அதன் உலகளாவிய உச்சத்தை எட்டியுள்ளது மற்றும் இது இந்த ஆண்டு வரை தொடரும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
புதிய மாறுபாடுகள் அதிக அளவில் பரவக்கூடியவை எனவும், தடுப்பூசிகள் வழங்கும் பாதுகாப்பு பலன்அளிக்காது என நிரூபிக்கப்பட்டால், நாட்டில் ஜனவரி மாதத்தில் இருந்ததை விட அதிக துன்பம் ஏற்பட சாத்தியம் இருக்கிறது.
பொதுவாகவே இலையுதிர்காலத்தில் NHS மீது அழுத்தம் மிக அதிகமாக இருக்கும் மற்றும் சுவாச நோய்களைப் பரப்புவதற்கு காலநிலை உகந்ததாக இருக்கும்.
இந்நிலையில், இந்த இலையுதிர்காலத்தில் தொற்றுகள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக பிரதமர் கூறினார்.