ஜேர்மனியில் அதிகரிக்கும் இந்திய கொரோனா வைரஸ் தொற்று
இந்தியாவில் கண்டறியப்பட்ட திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் ஜேர்மனியில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.
B.1.617 என்று அழைக்கப்படும் அந்த திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் ஜேர்மனியில் குறைந்த அளவிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றாலும், அது சமீபத்தைய சில வாரங்களாக தொடர்ச்சியாக அதிகரித்தவண்ணம் உள்ளதாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக பார்க்கும்போது,கொரோனா தொற்று இன்று குறைந்துள்ளதாக ஜேர்மனி அறிவித்துள்ளது. இந்திய கொரோனா வைரஸ் ஆபத்தானது என சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், அது எந்த அளவுக்கு ஆபத்தானது என தெரியவில்லை என Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திலேயே ஜேர்மனி இந்தியாவிலிருந்து வரும் விமானங்களை தடை
செய்துவிட்டது. ஜேர்மன் குடிமக்கள் மற்றும் ஜேர்மன் வாழிட உரிமம் கொண்டவர்கள்
மட்டுமே தற்போது ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.