போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்திய வீரர்கள் பயத்தில் இருந்தார்கள்! இன்சமாம் கருத்து
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய வீரர்கள் விளையாடிய விதம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் துணிச்சலாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியதாவது, பாகிஸ்தான் உடனான போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்திய வீரர்கள் பயத்தில் இருந்தார்கள் என நான் நினைக்கிறேன்.
டாஸின் போது விராட் கோலி மற்றும் பாபர் அசாம் அளித்த பேட்டியை பார்த்தால், யார் அழுத்ததில் இருந்தார்கள் என்பதை காணலாம்.
எங்கள் அணி வீரர்களின் உடல் மொழி அவர்களை விட சிறப்பாக இருந்தது.
ரோகித் சர்மா அவுட்டான பின் இந்திய அணி நெருக்கடிக்கு உள்ளாகவில்லை. ரோகித் சர்மாவே அழுத்தத்தில் தான் இருந்தார்.
இந்திய வீரர்கள் அனைவரும் அழுத்தத்தில் இருந்தது வெளிப்படையாக தெரிந்தது.
இந்திய வீரர்கள் அவர்கள் எப்போதும் விளையாடும் விதத்தில் விளையாடவில்லை. அவர்கள் சிறந்த டி20 அணி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
கடந்த 2-3 ஆண்டுகளில் அவர்கள் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் போட்டி அவர்கள் மீது பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானிடம் தோற்ற பிறகு இந்திய வீரர்கள் மீது விமர்சனங்கள் குவிந்தன. அவர்களால் நியசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் சாண்ட்னர் மற்றும் சோதிக்கு எதிராக கூட விளையாட முடியவில்லை.
இந்திய வீரர்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுபவர்கள் என இன்சமாம் குறிப்பிட்டுள்ளார்.