காத்திருக்கவைக்கும் பிரித்தானிய மருத்துவமனைகள்: பெண்ணொருவர் சந்தித்த வித்தியாசமான அனுபவம்
துபாயில் வாழும் பெண்ணொருவர், பிரித்தானிய மருத்துவமனைகளுக்கும் துபாய் மருத்துவமனைகளுக்கும் உள்ள வித்தியாசம் குறித்த ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
மிருதுளா சிவகுமார் துபாயில் வாழ்ந்துவரும் இந்திய இளம்பெண். சமீபத்தில் தன் காலில் அடிபட்டதால் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அவர்.
அங்கு தான் சந்தித்த அனுபவம், முன்னொருமுறை பிரித்தானியாவில் சந்தித்த ஒரு அனுபவத்தை நினைவுக்குக் கொண்டுவந்ததாக தெரிவிக்கிறார் மிருதுளா.
காத்திருக்கவைக்கும் பிரித்தானிய மருத்துவமனைகள்
காலில் அடிபட்டதால் துபாயிலுள்ள மருத்துவமனைக்குச் சென்ற மிருதுளா, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது, காலில் கட்டுப்போடுவது, மருந்துகள் வாங்குவது வரை, அனைத்துமே ஒரே மணி நேரத்தில் முடிந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்.
அதே நேரத்தில் தான் ஒரு அவசர வேலையாக பிரித்தானியா சென்றிருந்த நேரத்தில், அவசர சிகிச்சைப் பிரிவில், மருத்துவரை சந்திக்கவே ஆறு மணி நேரம் காத்திருந்ததாகத் தெரிவிக்கிறார் மிருதுளா.
இந்த தகவலை மிருதுளா சமூக ஊடகம் ஒன்றில் பகிர, அதைப் படித்த பலரும் தாங்களும் பிரித்தானியாவிலும் அமீரகத்திலும் உள்ள மருத்துவமனைகளில் தாங்கள் சந்தித்த வித்தியாசமான அனுபவங்களை நினைவுகூர்ந்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |