3 மாதத்தில் 19 கிலோ எடை குறைத்தேன்! இதை மட்டுமே செய்தாலே போதும்: இந்திய பெண் சொன்ன ரகசியம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மூன்று மாதத்தில் 19 கிலோ எடை குறைத்து நிரூபித்து காட்டியுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்தவர் Jaswal resides. இவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் குடிவரவு ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் தன்னுடைய எடை குறைப்பு ரகசியத்தை, அங்கிருக்கும் ஊள்ளூர் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், எனக்கு ஆரம்ப காலக் கட்டத்தில் மூட்டு வலி இருந்தது. இதனால் நான் மருத்துவரை பார்க்க சென்ற போது, அவர்கள் என்னை எடையை குறைக்க வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து எடை கூடினால், அது மேலும் முழங்காலுக்கு அழுத்ததை கொடுக்கும், வலி அதிகமாகும் என்று எச்சரித்தனர்.
இருப்பினும் நான் சிறிது காலம் என் உடல்நலம் மற்றும் எடை உயர்வைப் பற்றி கவலைப்படாமலும், அதன் விளைவுகளைப் பற்றி அறியாமலும், கண்ட உணவுகளை சாப்பிட ஆரம்பித்தேன்.
இதன் விளைவாக என் உடல் எடை கூட துவங்கியது. நான் அணியும் ஆடைகள் எல்லாம் இறுகத் துவங்கின. என்னுடைய நண்பர்கள், சகோதரர்கள் என் உடல் எடை அதிகரிப்பைப் பற்றி கிண்டல் செய்தனர்.
இதை எல்லாம் கேட்ட எனக்கு போதும், இதற்கு மேல் எதுவும் வேண்டாம் என்று எடை குறைக்க துவங்கினேன். இதற்காக தினமும் உடற்பயிற்சி, அதிகாலை 5 மணிக்கு யோகா என செய்து வந்தேன்.
ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் உடல் எடை குறைப்பிற்கு முக்கியமான மாதமாக அமைந்தது. நானும், என் கணவரும் இந்தியாவில் இருந்து துபாய்க்கு திரும்பிய போது, என் கணவர் நோய்வாய்ப்பட்டார்.
அதன் பின் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாங்கள் இருவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டோம்.
அப்போது தான் நாங்கள் ஆரோக்கியத்தின் முக்கியதுவத்தை உணர்ந்தோம். அந்த நேரம், நாங்கள் உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தோம். கணவர் மற்றும் மாமானார் இருவரும் எனக்கு ஒரு உந்துதலாக இருந்தனர்.
நீங்கள் உங்கள் எடையை குறைக்கும் போது, மற்றவர்கள் உங்களை பாராட்டுவார்கள் அல்லது இது எப்படி சாத்தியமானது என்று உதவி கேட்பார்கள். அப்போது நமக்கே அது ஆச்சரியமாக இருக்கும். எனது பழைய ஆடைகளை எல்லாம் மீண்டும் போட துவங்கிய போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இதற்கு முன் நான் பல முறை உடல் எடையை குறைக்க முயற்சித்துள்ளேன். ஆனால் அதில் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. உடல் எடைக்க குறைக்க அனைவரும் சொல்வது போல நான்கு முக்கிய ரகசியங்களை தெரிந்து கொண்டேன்.
அர்ப்பணிப்பு, மன உறுதி, பொறுமை மற்றும் ஆரோக்கியமான உணவு. ஆரோக்கியமான உணவு பழக்கங்களை நாம் கடைபிடிக்க துவங்கினால் அது எல்லாமே மாறிவிடும்.
இந்த உடல் எடை குறைப்பில் மிகப் பெரிய போராட்டம் என்றால் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து யோகாவுக்கு தயாராகுவது தான், அதுமட்டுமின்றி நாம் எடை குறைப்பில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது, சரியான உணவை உட்கொள்வது, சரியான அளவு உடற்பயிற்சி செய்வது, சரியான நேரத்தில் தூங்க செல்வது மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தான் முக்கியம்.
கடந்த மூன்று மாதத்தில் 19 கிலோ எடை குறைத்திருக்கும் இவர், 62 கிலோ எட்டும் வரை குறைக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும், ஆரம்பத்தில் நானும் எடை குறைப்பது என்பது மிகவும் கடினம் என்று தான் நினைத்தேன்.
ஆனால், இந்த உலகில் எது தான் எளிதாக கிடைக்கும். அது போன்று நீங்கள் நினைத்துக் கொண்டால், உங்களால் எதுவும் சாதிக்க முடியும். அப்படி நீங்கள் செய்து முடித்து இறுதியாக அதற்கான பலனை நீங்கள் அடைந்தால், அது ஒப்பிட முடியாத மகிழ்ச்சியாக அனுபவிப்பீர்கள்.
உடல் எடை குறைக்கு அவர் சொல்லும் குறிப்புகள்
ஆரோக்கியமான உணவும், சரியான உடற்பயிற்சியயும் செய்தால் மட்டுமே எடை இழப்பு சாத்தியமாகும்.
முடிந்தவரை வெள்ளை அரிசி, ரொட்டி, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையையும் நாம் தவிர்க்க வேண்டும். அதே போன்றுவாழைப்பழங்கள், மாம்பழங்கள் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்
அதுமட்டுமின்றி, பல தானியங்கள் எடை இழப்பை துரிதப்படுத்தும். .
நாம் நன்றாக உணவை மென்று சாப்பிடுவதிலும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதிலும் மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தும் போதும், உடல் எடை தானான குறையும்.
நான் பின்பற்றும் உணவு முறைகள்
- காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடையில் 4 கிளாஸ் வெதுவெதுப்பான சுடுநீர் நீரை குடிப்பேன்.
- மதிய உணவிலிருந்து இரவு உணவிற்கு இடையில் 3 முதல் 4 கிளாஸ் வெதுவெதுப்பான சுடுநீர் குடிப்பேன்.
- காலை உணவுக்கு முன் (வெறும் வயிற்றில்) இரண்டு தேக்கரண்டி வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை 1 ஸ்பூன் இயற்கை மசாலா, அதாவது சீரக விதைகள், ஆளி விதைகள், கேரம் விதைகள் மற்றும் பெருஞ்சீரகம் விதைகளைக் கொண்டு ஒரு டீ போல் அருந்துவேன்.
- காலை உணவு: பச்சை ஆப்பிள், உப்புமா, ஓட்ஸ் அல்லது தயிர்
- மதிய உணவுக்கு முன்: செர்ரி 8 முதல் 10 பிஞ்சுகள் மற்றும் ஆரஞ்சு பழம்.
- மதிய உணவு: ஒரு கப் நிறைய ஏதேனும் ஒரு காய், 1 சப்பாத்தி, சாலட்(கீரை, வெள்ளரி, வெள்ளை வெங்காயம், தக்காளி, கேரட் அடங்கியவை).
- மதிய உணவுக்குப் பிறகு (மாலை 6 மணியளவில்): அன்னாசி, தர்பூசணி, இனிப்பு முலாம்பழம் அல்லது இளநீர்.
-
இரவு நேரத்தில் பொதுவாக சாப்பிடமாட்டேன், அப்படி சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் 100 மில்லி பாலை மட்டுமே குடிப்பேன் என்று கூறி முடித்துள்ளார்.